அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் வைத்திருந்த 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை சீ சீ ரி வி கெமராவின் உதவியுடன் கொள்ளையடித்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதுடன் திருடிய பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவதினமான நேற்று வங்கியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை எடுத்துக் கொண்டு அதனை முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து அட்டாளைச்சேனை கடை ஒன்றின்முன் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது அங்கு வைத்திருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் முச்சக்கரவண்டி நிறுத்திவைத்திருந்த கடைக்கு முன்னால் பெருத்தப்பட்டிருந்த சீ சீ ரி வி கெமராவுடன் கொள்ளையரை அடையாளம் கண்டு இன்று அதிகாலை 4.00 மணிக்கு கொள்ளையரை கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM