முச்சக்கரவண்டியிலிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்  கைது 

18 Dec, 2015 | 06:46 PM
image

 

அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் வைத்திருந்த 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை சீ சீ ரி வி கெமராவின் உதவியுடன் கொள்ளையடித்த ஒருவரை இன்று  கைது செய்துள்ளதுடன் திருடிய பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவதினமான நேற்று  வங்கியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை எடுத்துக் கொண்டு அதனை முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து அட்டாளைச்சேனை கடை ஒன்றின்முன் நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது அங்கு வைத்திருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் முச்சக்கரவண்டி நிறுத்திவைத்திருந்த கடைக்கு முன்னால் பெருத்தப்பட்டிருந்த சீ சீ ரி வி கெமராவுடன் கொள்ளையரை அடையாளம் கண்டு இன்று அதிகாலை 4.00 மணிக்கு கொள்ளையரை கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22