தொற்றாளர்கள் டிசம்பரில் அதிகரிக்கலாம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Published By: Digital Desk 3

28 Oct, 2021 | 03:46 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது  எதிர்பார்க்காத அளவில் பாரியளவில் கொவிட் தொற்றாளர் அதிகரிப்பதற்கான முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையின் காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.

கடந்த வாரத்தில் விடுமுறை தினங்களில் மக்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாமல் சுற்றுலாக்களுக்கு சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

அதேபோன்று கடற்கரை விருந்துபசாரங்கள், களியாட்டங்களிலும் சுகாதார விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவக் கூடிய வகையில் செயற்பட்டனர்.

எனவே தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில் எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். 

தற்போது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொவிட் தொற்று ஏற்பட்டால் மரணங்கள் பதிவாகும் வீதம் குறைவாகவே காணப்படும்.

எவ்வாறிருப்பினும் கொவிட் கொத்தணிகள் உருவாகுதலுடன், டிசம்பர் மாதமாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் தற்போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

எனவே தான் டிசம்பராகும் போது நாம் எதிர்பார்க்காதளவில் பாரிய கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49