(எம்.மனோசித்ரா)
அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தொடர்பில் போலியான தகவல்களை முன்வைத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அருட்தந்தை சிறில் காமினி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கடந்த 23 ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி மற்றும் அருட்தந்தை றொஹான் சில்வா உள்ளிட்ட கத்தோலிக்க மதத்தலைவர்களால் இணையவழி தொழில்நுட்பத்தினூடாக (Zoom) வெளிநாடுகளிலுள்ள மக்களை தொடர்பு கொண்டு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் போலியான தகவல்களை முன்வைத்து, அவரது உயிருக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினால் கொழும்பு இல-1 நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்த விசாரணைகளுக்கான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று வியாழக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அருட் தந்தை சிறில் காமினியினால் விசாரணைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக ஒரு வார கால அவகாசம் கேட்டு விடுக்கப்பட்டிருந்த எழுத்து மூல ஆவணத்தை அருட் தந்தையர்கள் சிலர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM