பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Published By: Digital Desk 4

27 Oct, 2021 | 10:44 PM
image

(எம்.மனோசித்ரா)

முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை காலை 6.15 மணியளவில் முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , பிரிதொரு நபர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டினை நடத்துவதற்கு வந்த சந்தேகநபர்கள் முழுமையாக முகக்கவசத்தை அணிந்திருந்ததோடு , மோட்டார் சைக்கிளில் வந்து வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கண்டு பிடிப்பதற்காக பொலிஸாரால் பொது மக்களின் உதவியைக் கோருகின்றனர்.

அதற்கமைய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 இலட்சம் ரூபா சன்மானத்தினை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அத்தோடு வழங்கப்படும் தகவல் குறித்த இரகசிய தன்மை பேணப்படும்.

இவ்வாறு தேடப்படும் சந்தேகநபருடைய பெயர் பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக என்பதாகும். இவர் 30 வயதுடையவராவார்.

தேசிய அடையாள அட்டை இலக்கம் 911854481v என்பதாகும். இவர் தங்கியிருந்த முகவரிகள் , இல 42/02, பாரொன் திலகாந்த மாவத்தை, முல்லேரியா மற்றும் இல 333 சீ , ரொபட் குணவர்தன மாவத்தை, மாலம்பே. (மனைவியின் முகவரி) மற்றும் இல 252 , உடுமுல்ல , முல்லேரியா என்பவையாகும்.

அங்கொடை, ஹிட்புட்டான, முல்லேரியா, வெலிகம, மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த சந்தேகநபர் அதிகளவில் நடமாடுவார்.

சம்பவ தினத்தன்று WP XV 5432 என்ற இலக்க தகடுடைய மோட்டார் சைக்கிளிலேயே சந்தேகநபர் வருகை தந்துள்ளார். 071-8591727 , 077-7370360 மற்றும் 071-8592279 என்ற இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11