இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் - இத்தாலியில் பயங்கரம்

Published By: Digital Desk 3

27 Oct, 2021 | 02:13 PM
image

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர்  தனது சாபதி (11 வயது) மற்றும்  சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். 

வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில்,  நேற்று காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

போர்டோ சான் பான்கிராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் பெண்கள் காப்பகத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் பிள்ளைகளான சாபதி மற்றும் சாந்தனி அவர்களின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என விசாரணைகளின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது. 

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனை, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த இன்று நடைபெறவுள்ளது. 

குறித்த இரு பெண் பிள்ளைகளின் மரணமும் அந்ந  நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51