(இராஜதுரை ஹஷான்)
சேதன பசளை விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு குறுகிய அரசியல் இலாபம் தேடுவதை எதிர்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள மக்களின் எதிர்காலத்தை அழிக்கவும் தயாராகவுள்ளார் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை பெற்றுக்கொடுக்க முன்நிற்பதாகவும், நாட்டில் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுக்கொள்கிறார்.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக நாட்டு மக்களின் எதிர்காலத்தை அழிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக குறிப்பிட்டுக்கொள்கிறார்.
அரசியல் நோக்கத்தை கருத்திற்கொண்டு சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. என்பதை முதலில் நாட்டு மக்களும்,எதிர்க்கட்சியினரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் இரசாயன உரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் இலாபத்தை காட்டிலும் பன்மடங்கு பணத்தை தங்களின் சுகாதார தேவைக்காக செலவிடுகிறார்கள்.
உரம் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்படுவது பயனற்றது. பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் விவசாயத்தில் ஈடுப்படாமல், அரசியல்வாதிகளின் நோக்கத்திற்கமைய போராட்டத்தில் ஈடுப்படுவது கவலைக்குரியது.
சேதன பசளையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்படும் நெல்லுக்கான தற்போதைய உத்தரவாத விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் விவசாயத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காவிட்டால் நட்டஈடு வழங்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது.
சேதன பசளை விவகாரத்தை கொண்டு அரசியல் இலாபம் தேடிக்கொள்வதை எதிர்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.சேதன பசளை தொடர்பில் விவசாயிகள் மத்தியில் தவறான நிலைப்பாடு காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM