தென்மேற்கு ஜப்பானில் உள்ள மவுண்ட் அசோவின் எரிமலை மீண்டும் வெடிக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கு எரிமலை நிலநடுக்கங்கள் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளன.
மவுண்ட் அசோ ஜப்பானில் உள்ள மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலையாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றாகும்.
இது கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள அசோ குஜோ தேசிய பூங்காவில் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1,592 மீட்டர் உயரத்தில் உள்ளது.
எரிமலையில் முதலாவது நகடகே பள்ளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை வரை கடுமையாக உயர்ந்துள்ளது,
அதே நேரத்தில் பள்ளத்தின் ஆழமற்ற பகுதியில் ஏற்பட்ட விரிவாக்கத்தால் வெளிப்படையாக ஏற்பட்ட மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலுக்கு முன் 1,506 மீட்டர் பள்ளம் வெடித்ததைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எரிமலை எச்சரிக்கை அளவை 5 என்ற அளவில் 3 ஆக உயர்த்தியுள்ளது.
எரிமலை சாம்பல் பள்ளத்தில் இருந்து 1 கிலோ மீற்றருக்கு மேல் உமிழ்ந்ததாகவும், அக்டோபர் 2016 க்குப் பிறகு முதன்முறையாக பள்ளத்தின் மேற்கே 1.3 கிலோ மீற்றருக்குள் பைரோகிளாஸ்டிக் ஓட்டம் காணப்பட்டதாகவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் எரிமலை வெடிப்புக் காரணமாக உயிரிழப்பு மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. புகை அதிகமாக வெளியேறுவதால் 16 மலை ஏறுபவர்கள் காயமின்றி கீழே இறங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM