(எஸ்.என்.நிபோஜன்)
2016 ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
வருந்தோறும் நடைபெற்று வருகின்ற முரளி கிண்ணம் கடினப்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டி 2016 ஆம் ஆண்டுக்கான போட்டி இன்றைய தினம் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார, விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு நாலந்தா கல்லூரி அணிக்கும் கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருங்கிணைந்த அணிக்குமான முதலாவது தொடரினை ஆரம்பித்து வைத்தார்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நலந்தா கல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
குறித்த முரளிக் கிண்ணத் தொடரின் போட்டிகள் ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களிலும் நடைபெறுகின்றன.
இப்போட்டியில் 23 அணிகள் மோதவுள்ளன. இதில் மாங்குளம் மைதானத்தில் மட்டும் பெண்களுக்கான முரளிக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM