நுவரெலியா மாவட்டத்தில் இராலை மத்திய பிரிவு தோட்டத்தில் ஐந்து உயிர்களை காவுகொண்ட கோர தீ விபத்து சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவுவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் இன்று இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் வயது (27) என்பவரை இராகலை பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தங்கையா இரவீந்திரனை அன்றைய தினம் மாலை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இராகலை பொலிஸார் ஆஜர்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட இவரின் வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதவான் இன்று 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை பதுளை சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதி மன்ற சிறைக்கூட்டில் வைத்தனர்.
அதன் பின் இராகலை மத்தியப்பிரதேச தோட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தங்கையா இரவிச்சந்திரனை மன்றில் ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவுவிட்டிருந்தது.
இதையடுத்து சந்தேக நபரை நேற்று சிறைச்சாலை அதிகாரிகள் நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் ஆஜர் படுத்தினர். இதன்போது சந்தேக நபர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை ஆனால் சந்தேக நபர் தொடர்பாக இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் வழக்கை விசாரித்த நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை அறிக்கை மரண விசாரணை அறிக்கை பிரேத பரிசோதணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நீதி மன்றத்தில் அடுத்த வழக்கில் சமர்பிக்க பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பதாகவும் அதுவரை சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM