நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் 476A கிரிமிட்டி பிரிவுக்கு சொந்தமான கார்லிபேக் தோட்டத்தில் பாடசாலை வழியாக குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையை ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாதை புனரமைக்கப்பட்டது.
இப்பாதை புனரமைத்து ஒரு வருட காலங்கள்கூட பூர்த்தியாகாத நிலையில் உரிய முறையில் வடிகாலமைப்பு அமைக்கப்படாமையினால் ஆறுகளில் செல்ல வேண்டிய நீர் இப் பாதையின் ஊடாக வருவதால் இப் பாதைக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இன்று (25) திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது அவர்களின் சீருடைகள் எல்லாம் அழுக்கு நீர் பட்டநிலையில் வருகை தந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிதியானது நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு 476A கிராம சேவகர் பிரிவின் கண்காணிப்பில் இந்த வீதி புனரமைக்கப்பட்டது.
இதன் முழு பாதையும் 150 அடி கொண்டது. இதில் பாதை கொங்ரீட் 135 அடி மாத்திரம் இடப்பட்டுள்ளது. அதில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று இருக்கின்றது என இப்பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை கண்டிப்பதாகவும் இவ் வீதியின் ஓரங்களை ஒழுங்கான முறையில் அமைத்துத் தருவதற்கு அரசியல் வாதிகளும் நுவரெலியா பிரதேச செயலாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM