கூட்டு எதிர் கட்சியின் புதிய அரசியல் கட்சி மிக விரைவில் அறிவிக்கப்படும். ஆனால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பெற்றுக்கொள்ளாது கட்சி குறித்து அறிவித்து பலன் இல்லை. ஆகவே அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் யார் ? சின்னம் என்ன ? என்பது பிரச்சினை இல்லை. ஆனால் புதிய மாற்று அரசியல் சக்தியின் தேவை தற்போது அதிகமாக காணப்படுகின்றது. இதனை ஈடு செய்வதற்கான அடிப்படை காரணிகள் பூர்த்தியாகியுள்ளது. தேர்தலை அறிவிக்கும் பட்சத்தில் அனைத்தும் வெளியில் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை இன்று சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM