(இராஜதுரை ஹஷான்)
புகையிரத பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுப்படுவார்கள் குறித்து போக்குவரத்து அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இப்பிரச்சினைக்கு புகையிரத திணைக்களம் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
குருநாகலில் உள்ள புகையிரத நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர்மேலும்குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ்தாக்கம் குறைவடைந்ததை தொடர்ந்து பயணிகள் புகையிரத சேவை மாகாண எல்லைக்குள் மாத்திரம் வரையறுத்ததாக இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வகுக்கப்படவில்லை.
புகையிரத பருவகால அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பருவகால அட்டையில்லாதவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுப்படும்போது பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
ஆசன ஒதுக்கல் முறைமை ஊடாக பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம்.
பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவதால் புகையிரத திணைக்களம் இலாபமடைந்துவிடாது. இதனால் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கும் புகையிரத திணைக்களம் மேலும் நட்டமடைய நேரிடும்.
அனைத்து பயணிகளும்புகையிரத சேவையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான சிறந்த திட்டங்களை புகையிரத திணைக்களம் செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM