சி.அ.யோதிலிங்கம்
இழுவைப் படகுகளைத் தடைசெய்யக்கோரி கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை“முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை” கடல்வழிப் போராட்டம் இடம்பெற்றது. சுமார்100 வரையான படகுகளில் போராட்டக்காரர்கள் கடல் வழியாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரனின் தலைமையில் அவரது முன்னெடுப்பின் காரணமாகவே இப்போராட்டம் இடம்பெற்றது.
சுமந்திரன், சாணக்கியன், சிறீதரன்ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவும் , முன்னாள்மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், சயந்தன் , சுகிர்தன் , சிவயோகன் ஆகியோரும் பல உள்ளுராட்சிமன்றஉறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள்பலர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை குறிப்பாக கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா,செயலாளர் சத்தியலிங்கம் , சிரே~;ட துணைத்தலைவர் சிவஞானம், சரவணபவன் போன்றோரும் கலந்துகொள்ளவில்லை. பங்காளிக்கட்சிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. தங்களுக்கு எந்தவித அழைப்பும்வழங்கப்படவில்லை.
சுமந்திரன் தமிழரசுக்கட்சியியுடனோ, பங்காளிக்கட்சிகளுடனோ, எந்தவித கலந்துரையாடலையும்நடாத்தாமல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.தனித்தனி அழைப்புக்கள் தேவையற்றதென இக்குற்றச்சாட்டுக்களுக்கு சுமந்திரன் பதிலளித்துள்ளார்.
கலந்துரையாடி முடிவுக்கு வருவதென்றால் காலதாமதம் ஏற்படும் அதனாலேயே கலந்துரையாடாமல்ஏற்பாடு செய்ததாக கூறியிருந்தார். கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியிலிருப்பவர் சொந்தக்கட்சியுடனோ,பங்காளிக்கட்சியுடனோ, கலந்துரையாடாமல் முடிவெடுப்பது எந்த வகை ஜனநாயகம் என்பது சுமந்திரனுக்கேவெளிச்சம்.
இந்தப்போராட்ட விவகாரத்தில்சுமந்திரனின் அணுகுமுறை தொடர்பான விமர்சனக்களுக்கப்பால் போராட்டம் தமிழக மீனவர்களுக்குஎதிராக உள்ளது என்ற விமர்சனமே கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது. மறவன்புலவு சச்சிதானந்தனும்,காசி ஆனந்தனும் பிரதானமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-20
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM