பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் உரம் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து புத்தளம் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மாட்டுவண்டியில் பேரணியாக புத்தளம் மன்னார் வீதியினூடாக கொழும்பு முகத்திடலை சென்றடைந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நஸீர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எலுப்பியவாறும், தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் உருவ பொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM