வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கம்யூனிஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 09:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறிலங்கா கொம்யூனிஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு இன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ගුරුන්ට 'පාට් දැමු' කොල්ලුරේ සභාපති තනතුරින් නෙරපයි

வடமேல் மாகாண ஆளுநராக இருந்து வரும் ராஜா கொல்லுரே, கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி, 21ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளத்தை இடைநிறுத்துவதாகவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கூற்று பாரிய சர்ச்சையாக மாறியதுடன், எதிர்கட்சிகள் உட்பட தொழிற் சங்கங்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியது. அத்துடன் ஆளுநரின் அந்த கூற்றை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்திருந்தது. ஏனெனில் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கவாத கட்சியாகும். அவ்வாறான நிலையில் ஆசிரிய தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அவமதிக்கும் வகையில் அமைந்ததுடன் கட்சியின் கொள்கைக்கும் முரணாக இருந்தது.

அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு இன்று கட்சியின் தலைமையகத்தில் கூடியபோது, ஆளுநர் ராஜா கொல்லுரேயை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. இதன்போது அதற்காக வாக்கெடுப்ப நடத்தப்பட்டுள்ளது. 

ராஜா கொல்லுரேயும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், வாக்கெடுப்பின்போது அவருக்கு ஆதரவாக இருந்த சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்திருக்கின்றனர். இருந்தபோதும் 50 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பாலானவர்கள் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

அதன் பிரகாரம் அவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மத்திய குழு உறுப்பினர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10