(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் ஆரம்ப பிரிவுகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவிக்கையில் ,
ஆரம்ப பிரிவினை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும்.
200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கூறப்பட்டவாறு பாடசாலைகள் திறக்கப்படும்.
அதாவது 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படும் என்றார்.
கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் இதற்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM