சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் - சஜித்திடம் ஜப்பானியத் தூதுவர் உறுதி

Published By: Digital Desk 2

22 Oct, 2021 | 01:29 PM
image

நா.தனுஜா

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நேற்று 'பிரியாவிடை சந்திப்பை' நிகழ்த்திய இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் அகிரா சுகியாமா உறுதியளித்துள்ளார்.

 

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் அகிரா சுகியாமாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஜப்பானியத்தூதுவர் என்ற அடிப்படையில் அகிரா சுகியாமாவின் 3 வருட பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, அவர் எதிர்க்கட்சித்தலைவருடனான இந்தப் 'பிரியாவிடை சந்திப்பை' நிகழ்த்தியிருந்தார்.

 

இதன்போது கருத்து வெளியிட்ட ஜப்பானியத்தூதுவர் அகிரா சுகியாமா, 

பல்வேறு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் இச்சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியமைக்காக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கை போன்றதொரு அழகான நாட்டில் 3 வருடங்கள் தூதுவராகப் பணியாற்றிமையையிட்டுத் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். 

அதுமாத்திரமன்றி இக்காலப்பகுதியில் தம்முடன் பேணிய நட்புறவிற்கும் வழங்கிய அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.

 

அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ,

'நீண்டகாலமாக ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றிகூற விரும்புகின்றேன். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இலங்கைக்கு ஜப்பான் பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றது. உதாரணமாக ஜைக்கா போன்ற பல்வேறு  செயற்திட்டங்களின் ஊடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது' என்று சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பசுமை செயற்திட்டங்கள்' தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் ஜப்பானியத்தூதுவருக்கு விளக்கமளித்தார்.

அவற்றை செவிமடுத்த அகிரா சுகியாமா, தனது பதவிக்காலம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இவையனைத்தையும் தனது அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவதாக உறுதியளித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை செயற்திட்டங்களைப் பெரிதும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். 

அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கைக்கான புதிய ஜப்பானியத்தூதுவர் அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது எதிர்வுகூறியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04