மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான 'பைஸர்' முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் தடவை மற்றும் 2 ஆவது தடவையாக தோற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM