(நா.தனுஜா)
தற்போது நாடு முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாத்திரம் இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலும் புகையிரதசேவை மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் புகையிரதங்களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் புகையிரதசேவையையும் இடைநிறுத்தியிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிகோரி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப்பத்திரம், மிகப்பாரிய நிதிமோசடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM