சிரியா தலைநகர் டமாஸ்கஸில் புதன்கிழமை அதிகாலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு குண்டுத் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிரிய அரசு தொலைக்காட்சி மத்திய டமாஸ்கஸில் எரிந்த பேருந்தின் காட்சிகளைக் வெளிக்காட்டியுள்ளது. பொது மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பரபரப்பான நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஒரு காலத்தில் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிய பிறகு, சமீபத்திய ஆண்டுகளில் டமாஸ்கஸில் இத்தகைய தாக்குதல்கள் அரிதானவையாக இடம்பெறுகிறது.
2011 மார்ச் மாதம் தொடங்கிய சிரியாவின் மோதலில் 350,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள ஐந்து மில்லியன் மக்கள் உட்பட நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM