நீர் மூழ்கி கப்பலூடாக வடகொரியா ஏவுகணை பரிசோதனை

Published By: Vishnu

19 Oct, 2021 | 12:43 PM
image

வடகொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவிப் பரிசோதித்துள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10:17 மணிக்கு (01:17 GMT) வடகொரியாவின் சின்போவுக்கு அருகில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது என்று தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தற்போது ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் விவரங்கள் குறித்து முழுமையான பகுப்பாய்வை நடத்தி வருகின்றனர் என்று தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் வடகொரியா ஹைப்பர்சோனிக் மற்றும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளல் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சோதனைகளில் சில கடுமையான சர்வதேச தடைகளை மீறுகின்றன.

ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா சோதனை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13