முழுக் குடும்பத்துக்கும் பரந்தளவு சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கலாக மூன்று தலைமுறைகளுக்கு அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை கட்டணங்கள், சத்திர சிகிச்சை, மருத்துவ செலவுகள், பிரசவ சேவைகள், நோயியல் நிபுணர்கள், பல் மற்றும் பார்வை தொடர்பான சேவைகள் போன்றவற்றுக்கு பரிபூரண தீர்வுகளை வழங்கும். 75 வயது வரை சுகாதார காப்புறுதியை வழங்குகின்றது.
வருடமொன்றுக்கு 60 மில்லியன் ரூபாய் வரையான காப்பீட்டையும் வழங்குகின்றது. HEALTH 360 இனூடாக பிரத்தியேகமான, உள்வைக்கப்பட்ட பாரதூரமான நோய் காப்பீடு, வெளிநோயாளர் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அனுமதி காப்பீடு போன்றவற்றுடன் தடுப்பூசிகள் மற்றும் நோய் இனங்காணல் பரிசோதனைகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன.
HEALTH 360 அறிமுகம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “உங்கள் குடும்பம் என்பது உங்களின் மிகவும் பெறுமதியான சொத்தாகும். எந்தப் பெறுமதியும் அல்லது சொத்துகளும் அவர்களின் நலனை ஈடு செய்ய முடியாது.
இன்று, நாம் பல சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். அதிகளவில் எதிர்வுகூற முடியாததாக உள்ளதுடன், ஆதரவின்றி எமது குடும்பத்தாரின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது சிக்கலாக அமைந்துள்ளது.
இக்கால கட்டத்தில் 83 சதவீதமான இலங்கையர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 சதவீதமானவர்கள் இருதயக் கோளாறுடன் தொடர்புடையவர்களாக அமைந்துள்ளனர். வருடாந்தம் 4.7 மில்லியன் பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 25000 க்கும் அதிகமான நபர்கள் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயினால் இனங்காணப்படுகின்றனர்.
அவ்வாறான செலவுகளின் காரணமாக நபர் ஒருவரின் சேமிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். HEALTH 360 போன்ற சிறந்த சுகாதார பாதுகாப்பினூடாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனூடாக உங்களுக்கு அவசியமான போது தங்கியிருக்கக்கூடிய பாதுகாப்பு வலையை வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM