சிவலிங்கம்சிவகுமாரன்
அத்தியாவசியபொருட்களின் நிர்ணய விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் கடந்த வாரம் பல உணவு பொருட்கள்உட்பட அதைச் சார்ந்த ஏனைய பொருட்களும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விலைஅதிகரிப்பை கண்டிருந்தன.
நாட்டில்பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறுகிறார். மத்திய வங்கி ஆளுநரோ2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு கடன்களாக 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்களைசெலுத்தியுள்ளோம், கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றன என்கிறார்.
மட்டுமின்றி இந்த ஆண்டின்ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போதுஇந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவீதமாக எதிர்ப்பார்க்கப்படும் அதே வேளைஅடுத்த ஆண்டில் 6 இலிருந்து 6.5 சதவீத வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார்.
அத்தியாவசிய பொருட்களின்விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆனால் வர்த்தகர்கள் முன்வைத்தவிலைபட்டியலை விட குறைந்த அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவே அரசாங்கம் அனுமதியளித்துள்ளதுஎன வழமையான தனது சமாளிப்பு கதையை கூறுகிறார் வர்த்தக அமைச்சர் பந்துல.
மறுபக்கம் வெள்ளைப்பூண்டு சர்ச்சையில் பல சதோச அதிகாரிகள்கைதாகி வருகின்றனர். இதற்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று கூறி வரும்வர்த்தக அமைச்சர், உண்மையான கள்வர்களின் முகத்திரையை அகற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டால்மாத்திரமே நம்பப்படுவார்.
அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள்கூறும் விளக்கங்கள் ஒரு பக்கமிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ புதிய அரசியலமைப்புமற்றும் தேர்தல் முறைகள் பற்றியும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தனது கொள்கையை வலியுறுத்தும்வகையில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு பூர்த்தியின் போது உரையாற்றியிருந்தார்.
நாடு இப்போதிருக்கும் நிலைமையில்புதிய அரசியலமைப்போ அல்லது தேர்தல் முறை மாற்றங்களோ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-17#page-27
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM