இந்தியாவில் கோவை அருகே கைத்தொலைபேசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மாணவன் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
இவர், கடந்த 9 ஆம் திகதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு கைத்தொலைபேசி உபயோகித்துள்ளார்.
பின்னர் கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு நித்திரரைக்கு சென்றுவிட்டார்.
மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த கைத்தொலைபேசி வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ, மாணவனின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணவன் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM