இலங்கை அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜேர்மன் விமான நிறுவனம் சந்தித்த சிரமங்கள குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் இருந்து மாலைதீவுக்கு 226 பயணிகளுடன் பயணித்த ஜேர்மன் விமானம் மாலைதீவு வான்வெளியில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 11.25 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் குறித்த விமானம் பிற்பகல் ஒரு மணியளவில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது, விமான நிலையத்தில் கடன் அட்டை இயந்திரங்கள் செயலிழந்ததால், ஜேர்மன் பட்டய விமான நிறுவனமான காண்டோர், தரையிறங்கும் கட்டணம் செலுத்த ஒரு மணி நேரம் தாமதத்தை எதிர்கொண்டனர்.
மேலும் விமான நிலைய அதிகாரிகள் தாமதம் காரணமாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்த போதிலும், இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தாமதமாக செலுத்தும் அபராதக் கட்டணத்தில் கூடுதலாக 48 அமெரிக்க டொலர்களை வசூலிக்க நடவடிக்கை எடுத்ததால் இந்த சம்பவத்திற்கு சர்வதேச கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவன நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்த சம்பவத்தை தெளிவுபடுத்தி எழுத்துப்பூர்வ அறிக்கை ஜேர்மன் விமான நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM