எம்.மனோசித்ரா
மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருடன் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு , குறித்த பெண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து பெறுமதி மிக்க டொலர் பொதியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து ஒரு இலட்சத்து 29 000 ரூபா மோசடி செய்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடைய வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நுகேகொட பிரதேசத்தில் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸை பகுதியில் ஆடை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக அறியாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM