(செய்திப்பிரிவு)
முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நிலையில் வஹப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றமை அவதானத்திற்குரியது.
ஆகவே சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸ் மா திபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முகமது நபிஸல் அவரது பிறந்த தினத்தையொட்டி இம்மாதம் .இந்நாட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை இலக்காகக் கொண்டு வஹப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளின் ஈடுப்பட்டு வருவதை கண்காணித்து வருகிறோம்.
கடுமையான முறையில் திட்டுவதும், அச்சுறுத்தல் ஆகியவை கடந்த வாரங்களில் இடம்பெற்று வருகின்றன.இதன் உச்சக்கட்டமாக புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள அம்பலம் மொஹாதீன் முஸ்லிம் பள்ளிவாசலில் ' சுப்ஹானு மவ்லுன் பராயதய 'வில் ஈடு;ப்பட்டிருந்த சுபி பக்தர்கள் பலரை இலக்காகக் கொண்டு வஹப்வாதிகள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் கடவுளின் தூதுவராக இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்படும் முகமது நபியை வணங்குதலை வஹப்வாதிகள் புறக்கணிக்கிறார்கள்.
அல்லாஹ் கடவுளை வணங்குவது சிறந்தது என அவர்கள் கருதுகிறார்கள்.இருப்பினும் இலங்கையில் உள்ள சுபி முஸ்லிம் சமூகத்தினர் நபிஸல் அவரது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள்.இதனால் அவர்கள் வஹப்வாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
ஆகவே இம்மாதம் நபிஸல் அவரது பிறந்த நாளை கொண்டாடும் இலங்கைவாழ் சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM