அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எக்காரணமும் இல்லை - பந்துல 

Published By: Digital Desk 4

15 Oct, 2021 | 09:53 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை இவ்வருடத்திற்குள் குறைவடையும்.

மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என  வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வியாபாரிகளின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக்கொள்ள  நேர்ந்துள்ளது - பந்துல குணவர்தன | Virakesari.lk

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் சேவைத்துறையின் கட்டணம் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் முகாமைத்துவம் செய்ய முடியாது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறான நிலையில் தேசிய மட்டத்தில் விலையேற்றத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.சமையல் எரிவாயுவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.

இவ்வருடத்திற்குள் திறைச்சேரி ஊடாக நிதி ஒதுக்கி அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குறுகிய அரசியல் நோக்கததை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பூகோளிய பொருளாதாரம் தற்போது எதிர்க் கொண்டுள்ள நிலைமையை அறிவார்ந்த மக்கள் புரிந்துக்கொள்வார்கள்.

எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை கைவிட்டு மக்கள் மத்தியில் உண்மை காரணிகளை எடுத்துரைக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு எதிராக அமையும்.என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்தின் விருப்பத்திற்கமைய பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08