இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.
இவருக்கு நிரோஜா (22) என்ற மனைவியும், தைசிகா (5), சாய்ஷிகா (1) என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இவர், தான் வசிக்கும் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தாராம். ஏலத்தில் பணம் எடுத்தவர்களில் 16 பேர் பணம் தராமல் ஏமாற்றி விட்டனராம். பணத்தை திருப்பிக் கேட்டால் தாக்கினார்களாம். இது குறித்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த மனோஜ் திடீரென தான் மட்டும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவரை தடுத்து, கேணிக்கரை பொலிஸ்; நிலையத்துக்கு அழைத்து சென்றனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM