அமெரிக்க நியூஜெர்ஸி புகையிரத நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான உபகரணமொன்றை குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் ரோபோவொன்றைப் பயன்படுத்தி நேற்று திங்கட்கிழமை செயலிழக்க வைக்க முயன்ற போது அது வெடித்துள்ளது.
அந்த உபகரணமானது எலிஸபெத் பிராந்தியத்திலுள்ள மேற்படி புகையிரத நிலையத்துக்கு அண்மையில் குப்பைத் தொட்டியொன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட பையொன்றில் இருந்த 5 உபகரணங்களில் ஒன்றெனத் தெரிவிக்கப்படுகிறது.
வார இறுதியில் நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் மின்னேஸோராவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் என்பவற்றைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க்கின் செல்ஸி பிராந்தியத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 29 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் நியூஜெர்ஸியிலுள்ள எலிஸபெத் பிராந்தியத்தில் மேற்படி முதுகில் சுமந்து செல்லும் பையில் கண்டெடுக்கப்பட்ட உபகரணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வெடிக்க வைக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த உபகரணத்தை பரிசோதித்த ரோபோ, அதன் கம்பி இணைப்பொன்றை துண்டித்த வேளை அது திடீரென வெடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உபகரணம் காணப்பட்ட பையை அவ்வழியாக சென்ற இருவர் ஏதாவது பெறுமதி மிக்க பொருட்கள் இருக்கின்றனவா எனப் பார்க்க அதனை குப்பைத் தொட்டியிலிருந்து வெளியில் எடுத்த போது, அதற்குள் பல உபகரணங்களும் குழாய்களும் கம்பி இணைப்புகளும் இருப்பது கண்டு அவர்கள் திகைப்படைந்ததாகவும் தொடர்ந்து அவர்கள் அந்தப் பையை ஒரு மூலையில் வைத்து விட்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பிராந்திய மேயர் கிறிஸ்ரியன் பொல்வேஜ் கூறினார்.
நியூயோர்க்கில் வெடித்த குண்டும் அதற்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணமும் கடந்த 2013 ஆம் ஆண்டு போஸ்டன் குண்டு வெடிப்புகளில் உபயோகிக்கப்பட்டதையொத்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அமுக்க அடுப்பு உபகரணங்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்த அதேசமயம் இரண்டாவது குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
அந்த இரு குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM