இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 23 இந்திய மீனவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை - வெற்றிலைக்கேணியின் கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து பணிகளின்போதே இவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுநோய் பரவும் நெறிமுறைகளை பின்பற்றியே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 02 மீன்பிடி படகுகளும் கைதான 23 இந்திய மீனவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 05 மீன்பிடி படகுகளையும் 54 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் 2021 மார்ச் 24 அன்று கைதுசெய்திருந்தனர்.
எனினும் கொவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளை கருத்திற் கொண்டு, கைதான மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களைத் தடுக்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM