இரு படகுகளுடன் 23 இந்திய மீனவர்கள் கைது

Published By: Vishnu

14 Oct, 2021 | 10:11 AM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 23 இந்திய மீனவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - வெற்றிலைக்கேணியின் கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து பணிகளின்போதே இவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுநோய் பரவும் நெறிமுறைகளை பின்பற்றியே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 02 மீன்பிடி படகுகளும் கைதான 23 இந்திய மீனவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 05 மீன்பிடி படகுகளையும் 54 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் 2021 மார்ச் 24 அன்று  கைதுசெய்திருந்தனர்.

எனினும் கொவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளை கருத்திற் கொண்டு, கைதான மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களைத் தடுக்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17