பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு பிணை

Published By: Gayathri

13 Oct, 2021 | 08:10 PM
image

மஸ்கெலியா பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் இரு பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதபதி டி. ஜீ. பிரதீப ஜயசிங்க நேற்று (12) செவ்வாய்கிழமை அனுமதி வழங்கினார். 

கடந்த மாதம் 28 ஆம் திகதி கட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்தது. 

இதன்போது தோட்ட தொழிலாளர்கள் மீது அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தாக்குதல் மேற்கொண்டனர்.

தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக இரு பெண் தொழிலாளர்களும்  லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

குறித்த பெண் தொழிலாளர்கள் இருவர் அன்றையதினம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் இருவரையும் நேற்று(12)செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு விட்டிருந்தார். 

இதன்படி நேற்று 12 ஆம் திகதி அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபொழுது அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02