ஸ்பெயினில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் 700 முதல் 800 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினில் கனரி தீவுக்கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திடீரென சீற்றம் ஏற்பட்டது.
எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதற்கு முன்னர் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து 24 நாட்களாக எரிமலை சீற்றம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
எரிமலை குழம்பு வெளியேறி 595 (5.95 சதுர கிமீ) ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.
1,281 கட்டிடங்கள் எரிமலை சீற்றத்தால் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் இது சுமார் 60 ஹெக்டயர் (0.6 சதுர கிமீ) புதிய நிலத்தை உருவாக்க வழிவகுத்தது. திங்களன்று மலையில் இருந்து வழிந்தோடிய எரிமலை குழம்பு சீமந்து தொழிற்சாலையை அழித்துள்ளது.
எல் பாசோ மற்றும் லாஸ் லானோஸ் டி அரிடேன் நகராட்சிகளைச் சேர்ந்த 3,500 பேர் தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் தற்காலிகமாக தங்கள் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சல்பர் டை ஒக்சைட் அளவீடுகள் மற்றும் தொடர்ச்சியான சிறிய நிலநடுக்கங்களினால் இந்த எரிமலை வெடிப்பு மிக நீண்ட காலம் நீடிக்கும் என்பதைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் புதன்கிழமை லா பால்மாவுக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொள்வதாகக் கூறினார், இது மூன்று வாரங்களில் நான்காவது விஜயமாகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க சுமார் 237.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீவின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றுலா மற்றும் வாழைப்பயிர் செய்கை அடிப்படையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM