யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஷ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னனியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்களுக்கான பிராந்திய சமஷ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் புலம்பெயர் அமைப்புடன் இணைந்து ஏற்கனவே புதிய அரசியலமைப்பில் அதற்கான வரைபுகளை உள்ளடக்கி விட்டார்கள். நாட்டை தாரைவார்க்க நினைப்பவர்கள் அதற்கான மூலதர்மங்களை பாராளுமன்றத்தின் அனுமதியோடு நிறைவேற்ற நினைக்கின்றனர்.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊகத்தின்படி நவம்பர் மாதம் புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமானால் ஜனவரி மாதமளவில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்கள். பாராளுமன்றத்தின் முழு அனுமதியுடன் அதனை நிறைவேற்றியதாகவும் கூறுவார்கள் ஆனால் நாட்டை நேசிப்பவர்கள் தன்னை சுதாகரித்துக்கொண்டு முழு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM