(எஸ்.என். நிபோஜன்)
கிளிநொச்சி பொதுச் சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அனைத்து உடைமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு அத்தியாவசிய தேவைகளை கரச்சி பிரதேச சபையினர் செய்துவருகின்றனர்.
இதேவேளை, அவர்களுக்கு உந்துசக்தியாக சந்தை வணிகர்கள் மற்றும் கிளிநொச்சி வணிகர்கள் அவர்களுக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினமும் கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதனின் முயற்சியில் கரச்சி பிரதேச சபையின் நிதி உதவியிலும் கிளிநொச்சி வர்த்தகர்களது ஆதரவுடனும் இருபத்து இரண்டு தற்காலிக கடைத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கடைகள் பழக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு நாளையதினம் மீளவும் பழக்கடைத் தொகுதி இயங்கவுள்ளது.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்ப்பட்ட தீவிபத்தின் போது இராணுவத்தினர், பொலிஸார், கிளிநொச்சி, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் குறித்த இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் வருகை தந்து உதவிகளைச் செய்தனர்.
இதேவேளை, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், அவருடன் சில பிரதேச சபையின் பணியாளர்களும் இரவுபகலாக சேவையில் ஈடுபட்டிருந்தனர் அவர்களுக்கு தமது நன்றிகளை பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM