புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க அவதானம்

Published By: Digital Desk 4

11 Oct, 2021 | 03:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சும்,போக்குவரத்து அமைச்சும் ஒன்றிணைந்து செயற்படுவதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை நாடு தழுவிய ரீதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம்  திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இம்மாதம்(ஒக்டோபர்) முதலாம் திகதி தளர்த்தப்பட்டது.இருப்பினும் மாகாணங்களுக்கிடையில் பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 மாகாணங்களுக்கிடையிலும்,மாகாணங்களுக்குள்ளும் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையை இரண்டு வார காலத்திற்கு ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கவில்லை.

எதிர்வரும்15ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை குறிப்பிட முடியாது.

பயணிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்;டதும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்;டமிடப்பட்டுள்ளது.

புகையிரத்திற்குள்  சன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவைக்காக தினசரி 130 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.என்றார்.

 அத்தியாசிய தேவைக்காக மாகாணங்களுக்கிடையிலான அரச பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் சுமார் 1500 அரச பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுகின்றன.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதும் அரச பேருந்து சேவை விரிவுப்படுத்தப்படும்.என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்சி ரணவக்க இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33