துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பால் மாவை இன்று முதல் புதிய விலையில் சந்தையில் விற்பனைக்கு விட முடியுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய விலைகளின்படி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு கிலோ கிராம் பால் மாவின் தற்போதைய விலை 1,195 ரூபாவாகவும் அதேவேளை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள 400 கிராம் பால் மா பக்கற் விலை 480 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படும்.
இதற்கிடையில் நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ காஸ் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவாக அதிகரித்து 2,750 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 5 கிலோ சிலிண்டர் விலை 503 ரூபாவதக அதிகரித்து 1,101 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2.5 கிலோ சிலிண்டர் விலை 231 ரூபாவாக அதிகரித்து 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 984 ரூபாவாக அதிகரித்து 2,840 ரூபாவாகும், 5 கிலோ சிலிண்டர் 393 ரூபாவாக அதிகரித்து 1,136 ரூபாவாகும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை சீமெந்து மற்றும் கோதுமை மா போன்ற பிற பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM