தீர்வுக்கு 21 ஆம் திகதி வரை கால அவகாசம் : இல்லையென்றால் போராட்டம் : இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

10 Oct, 2021 | 07:31 PM
image

(ஆர்.யசி)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரச தரப்பினருக்கு இடையில் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து போராட்டத்தை முடக்க முடியாது - இலங்கை  ஆசிரியர் சங்கம் | Virakesari.lk

அதிபர், ஆசிரியர்களின் சம்பள கொடுப்பனவுகள் குறித்த முரண்பாடுகள் தொடர்பில் நீண்ட காலமாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்ற நிலையில் எதிர்கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கூட இது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த வாரங்களில் கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கூட அதிபர் ஆசிரியர் சம்பள கொடுப்பனவுகள் குறித்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைமைகள் சபையில் வலியுறுத்தியிருந்தனர். 

கடந்த வியாழக்கிழமை அபயாராம விகாரையில் சர்வ கட்சிகளின் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைத்து இந்த விடயங்கள் குறித்து தேரர்களிடம் வலியுறுத்தியிருந்த நிலையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட சங்கைக்குரிய தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சர்களுடன் இது குறித்து பேசி தீர்மானம் ஒன்றுக்கு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த போராட்டங்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில், கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சரவை உபகுழு உறுப்பினர்கள் கூடி ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியிருந்த போதிலும்  நாளை காலையில் முன்னெடுக்கவிருந்த பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கான அடுத்த திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்கவிடம் வினவிய போது அவர் கூறுகையில்,

ஆசிரியர் சங்க பிரச்சினைகள் குறித்து எமது நீண்டகால கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் நாளைய தினம்  எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேரம் ஒதுக்கிக்கொடுத்திருந்தார். பிரதமருடன் கல்வி அமைச்சர், மற்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள கொடுப்பனவுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவுடன் இந்த பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாளை காலை அரச தரப்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.  

எதிர்வரும் 21ஆம் திகதி மூவாயிரத்திற்கு அண்ணளவான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் எந்த சிக்கலும் இல்லாது எம்மாலும் செயற்பட முடியும்.அவ்வாறு இல்லை என்றால், எமக்கு தீர்வு கிடைக்காது போனால்  இந்த பிரச்சினைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும், போரட்டங்களும் தொடரும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08