தமிழ் திரையிசை உலகில் பாடலாசிரியராகவும், தமிழ் இலக்கிய உலகில்கவிஞராகவும் வலம்வந்த பிறைசூடன் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். அறுபத்தி ஐந்து வயதாகும் பாடலாசிரியர் பிறைசூடன், திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் திகதியன்று பிறந்தார்.
1985ஆம் ஆண்டில் வெளியான 'சிறை' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மெல்லிசைமன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ், தேவா, எஸ் ஏ ராஜ்குமார், ஆதித்யன், இசைப்புயல்ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களுடன் பாடலாசிரியராக பணியாற்றுகிறார்.
இவர்இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி இருக்கிறார். ஐயாயிரத்திற்கும்மேற்பட்ட சுயாதீன இசை அல்ப பாடல்களை எழுதி இருக்கிறார். ரஜினி நடிப்பில் வெளியான 'பணக்காரன்', ஆர்கே செல்வமணி இயக்கத்தில்வெளியான 'செம்பருத்தி', மற்றும் 'கேப்டன் பிரபாகரன்' உள்ளிட்ட பல படங்களில் இவர் எழுதியபாடல்கள் சாகாவரம் பெற்றவை.
ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தில் இடம் பெற்ற'சோல பசுங்கிளியே..' என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைவென்றிருக்கிறார். பிறைசூடன் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் கவிஞராகவும், வசனகர்த்தாவாகவும்,சோதிடராகவும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தும் ஆன்மீக பற்றாளராகவும் வலம் வந்தார்.
இவர்விரைவில் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தயாரான 'அண்ணாத்த' படத்தில்ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.பலர் நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது இறுதி சடங்குஇன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM