(எம்.மனோசித்ரா)
நுவரெலியா மாவட்டம் - ராகல தோட்டம் மத்திய பிரிவில் நேற்று வியாழக்கிழமை இரவு வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுடைய ஆணொருவரும், 55 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் இருவரும் , 11 வயதுடைய சிறுவனொருவரும் , ஒரு வயதுடைய குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் குற்ற விசாரணைப்பிரிவினரால் தீவிபத்து இடம்பெற்ற இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இன்று வரை இனங்காணப்பட்டிருக்காத நிலையில், அது தொடர்பில் ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM