பண்டோரா பேப்பர்ஸ் : திருக்குமார் நடேசன் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராவார்

Published By: Digital Desk 3

08 Oct, 2021 | 10:22 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை விசாரிக்க  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவை அமைத்துள்ளது.

குறித்த ஆணைக் குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி  நுவன் அசங்கவின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய ஐவர் கொண்ட சிறப்புக் குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள திருக் குமார் நடேசனிடம்,  ஆணைக் குழுவினர் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொள்ளவுள்ளனர்.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று முன்தினம் (6) உத்தரவிட்ட நிலையிலேயே, அன்றைய தினம் மாலை முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் செயலர்  அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

விசாரணைக்கான அனுமதியை நேற்று முன்தினம் கூடிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மூவரும் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது. அதன்படியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்த நிலையில் ஜனாதிபதி விசாரணைக்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேஷன் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55