(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவை அமைத்துள்ளது.
குறித்த ஆணைக் குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நுவன் அசங்கவின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய ஐவர் கொண்ட சிறப்புக் குழு இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள திருக் குமார் நடேசனிடம், ஆணைக் குழுவினர் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொள்ளவுள்ளனர்.
பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று முன்தினம் (6) உத்தரவிட்ட நிலையிலேயே, அன்றைய தினம் மாலை முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் செயலர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.
விசாரணைக்கான அனுமதியை நேற்று முன்தினம் கூடிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மூவரும் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது. அதன்படியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்த நிலையில் ஜனாதிபதி விசாரணைக்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேஷன் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM