மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற தாயொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகவல, கலுகல்ல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் மகன் செலுத்திய மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்திலிருந்து பயணித்த தாய் நித்திரை காரணமாக கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேநேரம் தாய் கீழே விழுந்ததும் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாது மகனும் மோட்டார் சைக்கிளுடன் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மரணித்த தாய் ஹத்தரலியத்த, நிக்கதென்ன என்ற இடத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் கண்டி நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM