மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி

Published By: Priyatharshan

19 Sep, 2016 | 10:14 AM
image

மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற தாயொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகவல, கலுகல்ல  என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவத்தில் மகன் செலுத்திய மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்திலிருந்து பயணித்த தாய் நித்திரை காரணமாக கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேநேரம் தாய் கீழே விழுந்ததும் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாது மகனும் மோட்டார் சைக்கிளுடன் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மரணித்த தாய் ஹத்தரலியத்த, நிக்கதென்ன என்ற இடத்தைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் கண்டி நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34