புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு : ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

Published By: MD.Lucias

19 Sep, 2016 | 10:13 AM
image

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிவரை குறித்தப் பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிசந்திரன்  நீதிமன்ற பிடியாணையின் கீழ் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த போது நேற்று முன்தினம்(17) தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த நபர் தான் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் நேற்று அங்கு பதற்ற நிலை நீடித்தது.

இதனையடுத்து உடனடியாக இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பொலிஸாரையும் இடமாற்ற வேண்டும் என பொதுமக்கள் நேற்று மாலை 3 மணிவரை கண்டி நுவரெலியா வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் நேற்றிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு இன்று மாலை 3 மணிக்கு இறுதிகிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நல்லடக்கம் செய்யும் முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ போராட்டங்;கள் நடாத்த முடியாது என தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41