வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர்.
சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர்.
அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாக பொலிசாரிடம் தாம் மடக்கி பிடித்து வைத்திருந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது,பொலிசாரின் பதுகாப்பில் இருந்த நபர் சில நிமிடங்களில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதனால் அவரை பொலிஸாரே வேண்டும் என்று தப்ப வைத்தனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM