பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்

Published By: Digital Desk 4

06 Oct, 2021 | 10:47 PM
image

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர். 

சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர். 

அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸாருக்கும் அறிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாக பொலிசாரிடம் தாம் மடக்கி பிடித்து வைத்திருந்த நபரை ஒப்படைத்துள்ளனர். 

இதன்போது,பொலிசாரின் பதுகாப்பில் இருந்த நபர் சில நிமிடங்களில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதனால் அவரை பொலிஸாரே வேண்டும் என்று தப்ப வைத்தனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58