சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 67 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் 07 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 80,122 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நேற்றைய தினம் 2,028 வாகனங்களில் பயணம் செய்த 2,982 நபர்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் உரிய காரணமின்றி 56 வாகனங்களில் பயணித்த 101 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார உத்தரவுகளை மீறி சேவையினை முன்னெடுக்கும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கண்டறியவும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி நேற்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் 2716 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக மீறிய 06 முச்சக்கர வண்டி சாரதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 1,100 நபர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM