நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

05 Oct, 2021 | 09:22 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியிலுமுள்ள 312 கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கைவிடப்பட்டது அரச ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்! | Virakesari.lk

நீண்ட நாட்களாக நிலவி வரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 87 நாட்களாக தொடர்கிறது. எனினும் அரசாங்கம் இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் அதனை நாம் நிராகரிக்கின்றோம்.

அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை ஒரே தடவையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். 5000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை.

எனவே தான் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு கொழும்பு நகரசபை மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி , லிப்டன் சுற்று வட்டம் வரை தொடரவுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியிலுள்ள 312 கல்வி கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51