வள்ளலார் பிறந்த ஓக்டோபர் 5ஆம் திகதி, இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,
'' அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5. 10. 1823 ஆம் ஆண்டில் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.
அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்திய ஞான சபையை எழுப்பினார். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் ' என்று பாடிய இவர், மக்களின் துயர் போக்க சத்திய தரும சாலையை நிறுவினார்.
அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.
'மனுமுறை கண்ட வாசகம்', 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
திருவருட்பா ஆறாம் திருமுறையில் எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப் பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி, அன்பை ஊட்டி வருகிறது.
அவர் பிறந்த நாளான ஓக்டோபர் 5-ஆம் நாள், இனி ஆண்டுதோறும் 'தனிப்பெருங்கருணை நாள்' எனக் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ''என அந்த அறிவிப்பில் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM