(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.
எனினும் நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயாலாளருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படுவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சேதன உரத்தின் மாதிரிகளை பரிசோதனைக்கு உற்படுத்தி அவை நிராகரிக்கப்பட்டதன் பின்னரும் கப்பலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட உரங்கள் இப்போதும் இலங்கையை நோக்கி வருகின்றது.
இவை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதால் இலங்கைக்குள் பாரிய நெருக்கடி நிலையொன்று ஏற்படும். அதேபோல் மாதிரிகளில் நிராகரிக்கப்பட்ட உரத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால் மாற்றீடாக எடுக்கும் வேலைத்திட்டம் என்ன? அதேபோல் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
சீனாவில் இருந்து உரம் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இலங்கையின் விளைச்சலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது நைற்றிஜன் உரமாகும். இது இலங்கையில் பயன்படுத்தும் உரத்துடன் கலப்பதற்கு (பூஸ்ட்) பயன்படுத்துவது.
பெருபோகத்திற்கு தேவையான சகல உரமும் 10ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை வந்தடையும். சீனாவில் இருந்து நைற்றிஜன் உரம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய அதனை நிறுத்தியுள்ளோம்.
எனினும் நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்யவதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம், ஒரு வேலை கால தாமதமானால் மாற்று வழிகளை கையாள்வோம். எனவே எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM