இந்தியா - இலங்கை இருதரப்பு கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. மித்ர சக்தி என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த இராணுவ பயிற்சியானது 8 ஆவது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த இரு தரப்பு பயிற்சியானது எதிர்வரும் 15 ஆம் திகதி அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் நடைப்பெறுகின்றது.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் குழுவுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் கூட்டுபயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளனர்.
இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான நெருங்கிய உறவை மேம்படுத்துவதோடு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறந்த செயல்பாடுகளைப் பகிர்வதையும் மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சியின் நோக்க என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இந்த பயிற்சியானது சர்வதேச எதிர் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் தந்திரோபாய அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்குகின்றது.
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நீண்ட தூரம் செல்லும் மற்றும் இரு படைகளுக்கும் இடையே அடிமட்ட அளவில் ஒத்துழைப்பை கொண்டுவருவதில் ஒரு முயற்சியாக இந்த பயிற்சிகள் அமையும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM