புத்தளம், நுரைச்சோலை கடற்கரையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (04) திங்கட்கிழமை மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்கரையோரப் பகுதியில் உள்ள மீன்வாடியொன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும்1064 கிலோ கிராம நிறையுடைய 32 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த மீன்வாடிக்குள் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்தனர். நுரைச்சோலை நரக்களி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், உலர்ந்த மஞ்சள் மூடைகளும், சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM